முழங்கால்களில் முன்னேற்றம்

முழங்கால்களில் முன்னேற்றம்!

யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். (1 நாளா 4:10)

முன்னேற்றத்துக்கான வழி, முழங்கால்களில் உண்டு!

யாபேஸின் தாய் துக்கமாக இருந்தார்.. ஆனால் யாபேஸ் துக்கமாக இருக்க விரும்பவில்லை.. தன் துக்கத்தை மாற்ற யாபேஸ் தேர்ந்தெடுத்த வழி முழங்கால்கள்.. ஆம் யாபேஸ் ஜெபிக்கிற மனிதனாய் மாறினார். ஜெபம் கேட்கப்பட்டது துக்கம் நீங்கினது..

கர்த்தருடைய சமூகத்துக்கு முன்பாக முழங்கால்படியிட்டு முன்னேறாத மனிதர்கள் யாரும் இல்லை..

முழங்கால் ஜெபங்கள் பெற்றுக்கொள்வதற்கு மட்டுமல்ல, கற்றுக்கொள்வதற்கும் உதவுகின்றன..

தானியேலின் முழங்கால்கள் ஜெயத்தை அளித்தது..
கிறிஸ்துவின் முழங்கால்களோ பாடநுபவிக்க பெலன் பெற்றது.. ஆக, முழங்காலிட்டு ஜெபிக்கிற மனிதன் முழுவதுமாய் தேவனிடம் தன்னை அர்ப்பணித்து இருக்கவேண்டும்!

எப்படியாயினும் சரி.. முழங்கால் ஜெபங்களுக்கு பலன்; பெலன் இரண்டும் உண்டு! ஆமென்!

Comments