லவோத்கேயா சபை
லவோத்கேயா சபை – இக்காலத்தியஎதிர்ப்பு சபை –
இன்றைக்கு 7வது சபையான லவோதிக்கேயா சபை குறித்து தியானிக்கலாம்
விசுவாச துரோக சபை (Apostate church)
*லவோதிக்கேயா என்றால் அரைமனசானவன், அலட்சியமானவன்(முக்கியமாக மதரீதியாக அரசியல் ரீதியாக)*
குறைகள்:
1. குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறாய்.
2. நிர்ப்பாக்கியமுள்ளவன் (மகிழ்ச்சியில்லாத செழிப்பில்லாத நிலை)
3. பரிதாபிகரமான நிலை
4. ஆவியில் தரித்தின்
5.குருடன் – வசனங்களை அறியாதவன் – தைலமாகிய நல்ல உபதேசம்தேவை
6. நிர்வாணி – நற்குணங்கள் இல்லாதவன்
*வெதுவெதுப்பாயிருப்பதால் வாந்தி பண்ணி போடுவேன் என்றால் கர்த்தர்தன் இருதயத்திலிருந்து எடுத்து விடுவார்.*
இந்த 7 சபைகளின் தீயவைகளை மேற்கொண்டு ஜெயித்தால் இயேசுகிறிஸ்துவின் இதயத்தை பிடித்து விடலாம். ஆமென்.
யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடையசிங்காசனத்திற்குமுன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், (வெளி. விசேஷம் 1 :4)
:
லவோதிக்கேயா சபை![💥](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f4a5.svg)
உலக சபை அல்லது கடைசி கால சபை
லவோதிக்கேயா – ‘ஜனங்களின் உரிமை‘ அல்லது ‘நியாயத் தீர்ப்பு‘
*லவோதிக்கேயா பட்டணம்:*
இது பிலதெல்பியாவிலிருந்து தென் திசையில் 43 மைல்தூரத்திலிருந்தது. கி.மு.250 ல்2 ம் அந்தியோக்கஸ் தன் மனைவிலவோதிக்கேயாவின் ஞாபகார்த்தமாக இப் பட்டணத்தைக் கட்டினான். எனவே, இப்பட்டணத்துக்கு லவோதிக்கேயா என பெயர் வந்தது.
கி.பி.60 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இப்பட்டணம் படு சேதமடைந்தது. இப்பட்டணத்தை சீர்படுத்த ரோம அரசாங்கம் பணம் கொடுக்க முன்வந்தும் இப்பட்டணத்தார் இப் பணத்தை வாங்க மறுத்து தாங்களே தங்கள்சொந்த செலவில் பட்டணத்தை சீர்படுத்திக் கொள்வதாக கூறினர்.
இங்கு துணி நெய்யும் தொழிலும் மிக பிரபல்யமாய் நடந்து வந்தது. ஆடுகள் திரளாய் வளர்க்கப்பட்டது. எனவே, கம்பளம் நெய்யும் தொழிலும்சிறப்பாய் நடைபெற்றது. இன்று அறியப்பட்ட உலகத்திற்குஇப்பட்டணத்திலிருந்து ஆடைகள் அனுப்பப்பட்டன.
இங்கு ஒரு கண் மருத்துவ சாலையும், மருத்துவக் கல்லூரியும் இருந்தது. இப்படணத்தில் மூன்று நாடக சாலையும், 30,000 பேர் இருக்கும் ஒருசர்க்கஸ் அரங்க சாலையும் இருக்கிறது.
இச்சபை கொலேசே பட்டணத்து எப்பாப்பிராவினால் ஸ்தாபிக்கப்பட்டது. 4 ம் நூற்றாண்டில் லவோதிக்கேயா சபையின் ஆலோசனைக்குழு ஒன்றுகூடி வேத புத்தகங்களை ஒன்று சேர்த்தனர். அப்போது வெளிப்படுத்தலின்புத்தகத்தை தள்ளிப் போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இப்பட்டணம் அழிக்கப்பட்ட நிலையிலுள்ளது. தொடர்ந்து ஏற்பட்டநிலநடுக்கங்களினால் இந்நிலை உண்டாயிற்று. இன்று இப்பட்டணம்இருந்த இடம் வனாந்திரமாய் உள்ளது. துருக்கி நாட்டிலுள்ளஇவ்விடத்துக்கு இப்போது எஸ்கிஹிசார் என்று பெயர்.
*இச்சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு:*
1. உண்மையும் சத்தியமுள்ள சாட்சி
2. தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதி
3. ஆமென் என்பவர்
இச்சபையின் நற்குணங்கள் ஒன்றும் கூறப்படவில்லை.
*தீய குணங்கள்:*
1. வெதுவெதுப்பான நிலை
2. நிர்பாக்கியமுள்ளது
3. பரிதபிக்கபட்டது
4. ஆவிக்குரிய நிலையில் தரித்திரம்
5. ஆவிக்குரிய கண் குருடாயிருந்தது
6. ஆவிக்குரிய நிலையில் நிர்வாகி
7. குறைவிருந்தும், ஒரு குறைவும் இல்லை என்கிற மாய்மாலம்
*எச்சரிப்பு:*
1. நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், வெண் வஸ்திரங்களையும், கண்களுக்கு கலிக்கத்தையும் வாங்கிக் கொள்.
2. நீ ஜாக்கிரதையாய் இருந்து மனம் திரும்பு
*ஜெயம் கொள்ளுகிறவனுக்கு வாக்குத்தத்தம்:*
லூக்கா: 22:28-30; எபேசியர்: 2:7; 2தீமோத்தேயு: 2:12; வெளிபடுத்தல்: 20:6
கிறிஸ்துவின் சிங்காசனத்தில் அவரோடுகூட உட்காரும் சிலாக்கியம்.
*இந்த 7 சபைகளின்தீயவைகளை மேற்கொண்டு ஜெயித்தால் இயேசு கிறிஸ்துவின்இதயத்தை பிடித்து விடலாம். ஆமென்.*
[30/08 8:24 pm] Aa uma Sister VDM:
இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றிவெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் *உன்னை என் வாயினின்றுவாந்திபண்ணிப்போடுவேன்.* Rev. 3:16 – என்பதன் அர்த்தம் என்ன![❓](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/2753.svg)
வாந்திப்பண்ணுவேன் என்று ஆண்டவர் கூறும் ஆவிக்குரிய அர்த்தம்என்ன?
“லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியதுஎன்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடையசிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;”
15 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீகுளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.
16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றிவெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்றுவாந்திபண்ணிப்போடுவேன்.
17 “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான்ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;”
18 “நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்டபொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீஉடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலேவாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக்கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனைசொல்லுகிறேன்.”
19 “நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டுசிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.”
20 “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என்சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடேபோஜனம்பண்ணுவான்.”
21 “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலேஅவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோஅவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்குஅருள்செய்வேன்.”
22 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன்கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.
*கிறிஸ்துவின் சபை*யார்( Church of Christ) என்பவர்கள் இப்படியும்சொல்லக்கேள்விப்படிருக்கிறேன்… சபைக்கு பெயர் வைக்கவே கூடாது*கிறிஸ்துவின் சபை* என்றே அழைக்கப்பட வேண்டும் .. மேலும் ஊர்பெயரை வைத்தும் அழைக்கலாம் ஆனால் சபைக்கு *நானே நல்லமேய்ப்பன் சபை, கிருபாசனம், பெந்தோகோஸ்தே சபை, அப்போஸ்தலஐக்கிய சபை, மாரநாதா சபை, சிஎஸ்ஐ சபை என்று பெயர் வைப்பதுவேதத்தின் படி தவறு என்று அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.
அவர்கள் சபைக்கு பெயர் வைக்கக்கூடாது என்று ஆதாரமாக வைக்கும்வசனம்.![👇🏻](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f447-1f3fb.svg)
![👇🏻](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f447-1f3fb.svg)
![👇🏻](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f447-1f3fb.svg)
ரோமர் 16:16
[16]ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். : நாங்க இருக்கிற பகுதியில்… ஒரேஏரியாவில் ஒரு கி.மீ கூட இருக்காது 7 8 சபைகள் இருக்கிறது…
சபை பெயர்கள்![👇🏻](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f447-1f3fb.svg)
பிரதரன் சபை
செவன்த் டே சபை
மெதடிஸ்ட் சபை
இரண்டு கிருபாசனம் சபை
மெதடிஸ்ட் சபை
Free மெதடிஸ் சபை
நாங்க ஒரு சபைகாரங்க ஒரு சபைக்கு போவதில்லை.![🤔](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f914.svg)
![🙄](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f644.svg)
VDM: அசத்தியத்தை ஏற்றுக் கொண்டால்எல்லா சபைகளுக்கும் செல்லலாம்
நான் மற்ற சபைகளுக்கும் செல்வதுண்டு, கிடியோன் ஊழியத்தின்நிமித்தமும், மற்ற சபைகளின் விசேஷித்த நாட்களிலும்.
[30/08 8:25 pm] Aa uma Sister VDM: ஆனால் சில சபை போதகர்கள் இதைஅனுமதிக்கமாட்டனர்.
[30/08 8:25 pm] Aa uma Sister VDM: ஆனாலும் துர்உபதேசக்காரர்களோடு கைகோர்ப்பது சரியில்லையே
“ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலேஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும்இருங்கள்.”
11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடையதுர்க்கிரியைகளுக்கு யோவானின் காலத்திலும் இப்படிபட்ட ஆட்கள் இருந்தனர்
தவிர மற்றஎந்த சபைகளும் கிடியோன்ஸ் Presentation பண்ண போய் விடுவோம்.
[30/08 8:25 pm] Aa uma Sister VDM: மற்ற அந்த சபைக்காரர்கள் மாமா, மச்சான் உறவு பாஸ்டர்… கைக்கோர்த்தாதான் நாம் பெலமா இருக்கும்பட்சத்தில் அவர்களையும் இழுக்க முடியும் நம்ம பக்கம்.![😀](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f600.svg)
![💪](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f4aa.svg)
![🤝](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f91d.svg)
: இந்த வசனம் ஒன்லி ஜீஷஸ், ஜெகோவாவிட்னஸ் காரர்களுக்கு மட்டும் பொருந்தும் எனநினைக்கிறேன்….தற்போதைய காலக்கட்டத்தில்…
[30/08 8:25 pm] Aa uma Sister VDM: ஏனென்றால் ஏழாம் நாள் காரர்களும், வேத மாணாக்கர்களும்,Hyper grace, மற்ற சில சபையினரும்ஆபத்தானவர்களே…
தேவத்துவத்தை மறுதலிக்கும் கூட்டத்தினர் இதை விடஆபத்தானவர்கள்.
லவோதிக்கேயா, மற்ற ஒவ்வொருசபையை சொல்லும்போது .. அந்த சபை ஊரின் பெயரினால்அழைக்கப்படுகிறது.
இன்றைக்கு நவீன உபதேசத்தை உபதேசிக்கிறவர்கள் என்னசெய்கிறார்கள் என்றால் ஒரு ஊருக்கு ஒரு திருச்சபைதான் இருக்கவேண்டும் என்றும், ஆதி அப்போஸ்தல காலத்தில் அப்படிதான் இருந்ததுஎன்று சொல்லுகிறார்கள்..ஆனால் அதற்கு வேத ஆதாரம் இல்லை.
லவோதிக்கேயா சபை என்பது லவோதிக்கேயாவில் கூடிவருகிற சிறு சிறுசபைகளை குறிக்கிறதாக இருக்கிறது. உதாரணத்திக்கு மங்களுர்சிட்டியில் ஒரே ஒரு சபைதான் இருக்க வேண்டுமென்று சொன்னால் … சிட்டியின் மற்ற இடத்திலிருந்து 30 40 கி.மீ பயணம் செய்து வரவேண்டும்அந்த குறிப்பிட்ட இடத்திற்க்கு. ஆகையால் அப்படிப்பட்ட அர்த்தத்திற்க்குஅது சொல்லப்பட்டிருக்காது.
சிலர் சொல்லுகின்றார்கள்.. ஊர் பெயரில் தான் சபை இருக்க வேண்டும், உங்க சபை பரலோகம் போகாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு நல்ல பாடமாக வெளிப்படுத்தின விசேஷத்தில் கர்த்தர்சொல்லிய காரியம் இருக்கிறது.
லவோதிக்கேயா என்பதுதுறைமுகங்களை கொண்ட பட்டணமாகவும், செயற்கையாகதுறைமுகங்களை கொண்ட, வாணிபத்தில் சிறந்து விளங்குவதாகஇருந்தது, மிகவும் செல்வந்ததாக இருந்தது.
லவோதிக்கேயா சபைக்கு ஆண்டவர் சொல்லும் காரியங்களை வைத்துநாம் புரிந்துக்கொள்ள முடியும்…
ஆண்டவர் தன்னை எப்படி Introduce பண்ணுகிறார் என்றால்…
வெளிப்படுத்தின விசேஷம் 3:14
[14]லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியதுஎன்னவெனில்: *உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடையசிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர்* சொல்லுகிறதாவது;
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஒரு நாமம் – ஆமென் என்பது. ஆமென்என்பது அப்படியே ஆகட்டும் என்பது மாத்திரமல்ல.. இயேசுகிறிஸ்துவின்பெயரையும் கொண்டதாக இருக்கிறது.
இந்த ஆமென் வார்த்தைக்கு எபிரேயத்தில் விசுவாசம் என்று அர்த்தம். அதனால் தான் எபிரேய ஆக்கியோன் இயேசுகிறிஸ்துவை விசுவாசத்தைதுவக்குகிறவரும், முடிக்கிறவரும் என்று சொல்லுகிறார்.
இயேசுகிறிஸ்துவிற்க்கு ஆமென் என்று சொல்ல இன்னோரு ஒருகாரணம் என்னவென்றால் அவர் பிறந்ததுமுதல், மரித்து உயிர்ந்தெழுந்தபின்பதாக கூட பிதாவின் சித்தத்தை செய்கிறவராக எல்லாசூழ்நிலையிலும் இருந்தார். தேவனுடைய சித்தத்தை எந்தசூழ்நிலையிலும் செய்யும் விசுவாசம். ஒரு குழந்தை தன்னைதூக்கிவைத்திருக்கிற தாயின் மேல் என்ன விசுவாசம் வைத்திருக்கிறதோஅது தான் விசுவாசம். இயேசுகிறிஸ்துவிற்க்கு இருந்த விசுவாசம் நம்ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
– Pastor Sam
:வெளிப்படுத்தின விசேஷம் 3:15
[15]உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; *நீ குளிருமல்ல அனலுமல்ல; நீகுளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.*
வெளிப்படுத்தின விசேஷம் 3:16
[16] *இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றிவெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்றுவாந்திபண்ணிப்போடுவேன்.*
லவோதிக்கேயா சபைக்கு புரியும்படியாக பேசுகிறார்…லவோதிக்கேயாபகுதியில் இயற்கையாகவே தண்ணீர் கிடையாது அவர்கள் ஆறு மைல்தொலைவிலிருந்து வெண்ணீர் ஊற்றிலிருந்து அந்த லவோதிக்கேயாநகரத்திற்க்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அந்த காலத்தில் சுரங்கங்கள்தோண்டி இங்கே கொண்டு வருவார்கள்.
வெண்ணீர் அங்கேயிருந்து இங்கே வருவதற்க்குள் சுண்ணாம்பு கலந்ததண்ணீராக சூடாகவும் இல்லாமல், குளிராகவும் இல்லாமல் useless தண்ணீராக மாறிவிடும். ஆண்டவர் என்ன சொல்லுகிறார் என்றால் அந்ததண்ணீரைப் போல குடிக்கவும், குளிக்கவும் எதற்கு உதவாத மாதிரிஇருக்கிறாய் என்று எச்சரிக்கிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:17
[17] *நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான்ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;*
லவோதிக்கேயா நகரம் ஆடைகளுக்கும் பெயர் வாங்கினதாய் இருந்தது. தன்னுடைய நிலையை அறியாத ஒரு சபையாக லவோதிக்கேயா சபைஇருந்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 3:18
[18]நான்: *நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்டபொன்னையும்,* *உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீஉடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலேவாங்கிக்கொள்ளவும், *நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக்கலிக்கம்போடவும் வேண்டுமென்று* உனக்கு ஆலோசனைசொல்லுகிறேன்.
பொன் என்று சொல்லும்போது, யோபு சொல்லுகிறார் நான் சோதித்தபின்புபொன்னாக விளங்குவேன் என்று…கர்த்தர் அந்த சபையை புடமிடுவேன்என்று சொல்லுகிறார்.
கலிக்கம் என்றால் குதிரை கண்ணை மறைக்கும் கலிக்கம் என்றுசொல்லுகிறார்கள் ஆனால் நான் ஒருவரிடம் பேசின விதத்தில்புரிந்துக்கொள்ளுதலில் நான் சொல்லுகிறேன் …கலிக்கம் என்றால் களிம்பு, லவோதிக்கேயா பெரிய கண் மருத்தவமனையில் கொடுக்கப்பட்ட களிம்புபிரசித்தம்பெற்றதாக இருந்தது ஆகவே ஆண்டவர் சொல்லுகிறார் உன்கண்ணுக்கு மருந்து போட வேண்டுமா என்று…
வெளிப்படுத்தின விசேஷம் 3:19
[19] *நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டுசிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.*
சிட்சை நல்லது, பாவம் செய்கிறவர்களை சிட்சிக்கிறார்.. மனந்திரும்புதலுக்கு நேராக நடத்துகிறார். மனந்திரும்ப வேண்டியதுஅவசியம்.
– Pastor Sam
[30/08 8:26 pm] Aa uma Sister VDM: வெளிப்படுத்தின விசேஷம் 3:20
[20]இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என்சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடேபோஜனம்பண்ணுவான்.
இந்த இடத்தில் ஆண்டவர் இரட்சிக்கப்பட்டவர்களிடத்தில் திருச்சபைக்குபேசிக்கொண்டிருக்கிறார்.
வாசற்படி என்பது முக்கியமானது. ரூத் புத்தகத்தில் பட்டணத்தின்வாசற்படியில், போவாஸ் அவனுடைய உடன்சுதந்திரவாளியானவனிடத்தில் உடன்படிக்கை செய்வான் So அதுபட்டணத்தின் வாசல் அது.
அதேப்போல வீட்டு வாசற்படி என்பது வெளியேயிருக்கிறவரிடத்தில்செய்கிற ஒரு உடன்படிக்கை. திருணத்தில் இதுஒரு முக்கியமானகாரியமாக இருக்கிறது.
நம் ஊரில் .. திருமணத்திற்க்கு பின்பு மணமகள் வீட்டிற்க்கு நுழையும்போது அந்த மணமகள் தன் கணவனோடு உடன்படிக்கை செய்கிறாள். அவள் அந்த வீட்டு வாசல் படியில் வரும்போது அவள் அந்தவீட்டிலிருப்பவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்கிறாள்.
முந்தைய காலத்தில் பெண் கேட்டு வருகிறவர்கள்.. மாப்பிளை வீட்டார்வாசலில் நிற்பார்கள், அவர்களை உள்ளே வாருங்கள் என்றுகூப்பிடுவார்கள். இதை எலியேசர் காரியத்தில் பார்க்கலாம். லாபான்சொல்லுவான்.
ஆதியாகமம் 24:31
[31] *அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளேவாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்குஇடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் என்றான்.*
வாசலை விட்டு தாண்டி உள்ளே வருவது என்பது அது ஒருஉடன்படிக்கையாக இருந்தது.
2 யோவான் 1:10-11
[10] *ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலேஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும்இருங்கள்.*
[11]அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடையதுர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.
– Pastor Sam
[30/08 8:26 pm] Aa uma Sister VDM: வீட்டிற்க்கு வந்த பின்பு என்னசெய்வார்கள் என்றால், போஜனம் பண்ணுவார்கள்.
வாசல்படியில் ஒரு சின்ன குழி இருக்கும்.நீங்களும் பார்த்திருக்கலாம்அவர்களிடத்தில் எதற்காக இந்த குழி என்று கேட்டால் அவர்களுக்குதெரியாது.
ஆனால் மத்திய கிழக்கு நாடுகளின் கலாச்சாரத்தை பார்த்தோமானால், வாசலில் யாராவது வெளியிலிருந்து வந்தால்.. அந்த குழியில்இரத்தத்தை ஊற்றுவார்கள், யார் அந்த இரத்தத்தை தாண்டுகிறார்களோஅவர்களோடு உடன்படிக்கை செய்கிறார்கள்.
இந்த வாசல்படி இங்கு தான் ஆண்டவர் நின்றுக்கொண்டிருக்கிறார்.யார்அவருக்கு கதவை திறக்கிறார்களோ அவர்களோடு ஒரு நித்தியஉடன்படிக்கையை செய்துகொள்ளுகிறார், போஜனம்பண்ணுகிறவராயிருக்கிறார்.
– Pastor Sam
[30/08 8:26 pm] Aa uma Sister VDM: யார் ஆண்டவரோடு போஜனம்பண்ணக்கூடிய Communion fellowship வருகிறதோ, அவர்கள்ஆண்டவரோடுகூட இயேசுகிறிஸ்து எப்படி உட்கார்ந்தாரோ அதேப்போலஅவரோடு உட்காருவார்கள்.
Every communion is a remembering an engagement service. இயேசுகிறிஸ்துவோடு கூட திருச்சபையானது பண்ணிக்கொண்ட அந்தநிச்சய உடன்படிக்கை நினைவு கூறும்படியாக இருக்கிறது. So கடைசிவரைக்கும் ஆண்டவருக்கு உண்மையாக இருந்தால் அவரோடு கூடஉட்கார அருள் செய்வார்.
தான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்று தெரியாத நிலைமையில்தான் சபை இருந்துக்கொண்டிருக்கிறது. வெளியே பாட்டு ஆராதனைஎன்று நன்றாக இருக்கிறது ஆனால் உள்ளே பரிசுத்தம் இல்லை. பிரயோஜனம் , ஆத்தும ஆதாயம் இல்லாம நிலையில் சபைபோய்க்கொண்டிருக்கிறது. இதைவிட்டு மந்திரும்ப வேண்டும், அந்தCommunion நிறைவுகூற வேண்டுமென்று கர்த்தர் இங்கேசொல்லுகிறார்.God bless you.
– Pastor Sam
[30/08 8:35 pm] Aa uma Sister VDM: Praise the lord
இதுவரை 7 சபைகளை குறித்த விளக்கம் புரியும்படியாகவும போதுமானதாகவும் அருமையாகவும்
இருந்த்து. இருப்பினும் எனக்கு7 சபைகளும் தற்சமயம எந்தெந்த
நாடுகளில் இருந்தன எனபதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.துருக்கி _யை சுட்டிக்காட்டடினீரகளே்.
வரலாற்றை விளக்கும்போத அது சம்பந்தமான அரிய பத்தகங்கள் , வீடியோ க்கள் பெட்டி செயதிகள _இவை கிடைக்குமிடம், தறசமயம்இருப்பிடத்தின்
நிலைமை போன்ற தகவல்களை தரலாமே. வேகமாக முடிக்க வேண்டியகட்டாயமா? என் எதிர்ப்பார்ப்பெல்லாம் அனலுமின்றி குளிருமின்றி_என்பதற்கு Bro.Sam அவரகள் வெந்நீர் ஊற்று வரலாறை அருமையாகசுட்டிக்காட்டினாரே அப்படி இருக்க வேண்டும். அட்மினரலகள் கிறிஸ்தவவரலாற்று ஆசிரியர்களை முன்னமே பேட்டி கண்டு அதைவெளியிணலாம். நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மேலாககர்த்தர் பெரிய காரியங்களைVEDA THIYANAM _மூலமாகசெய்வாராக.ஆமென்!
[30/08 8:55 pm] Aa uma Sister VDM:
*வெளிப்படுத்துதலில் குறிப்பிடப்பட்ட ஏழு சபைகளின் நகரங்கள் நவீனதுருக்கி நாட்டில் இருக்கின்றன.*![👇🏻](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f447-1f3fb.svg)
![👇🏻](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f447-1f3fb.svg)
எபேசில் நவீன துருக்கியில் அமைந்துள்ள எபேசு கிழக்கு மத்தியதரைக்கடலில் மிகப்பெரிய மற்றும் செல்வந்த நகரங்களில் ஒன்றாகும். இதுசுமார்250,000 மக்களைக் கொண்டது. கிரேக்க தெய்வம் ஆர்ட்டிஸ்கோவில் அங்கு அமைந்திருந்தது.
நவீன துருக்கியில் அமைந்துள்ள இது இப்போது இஸ்மிர் எனஅழைக்கப்படுகிறது. சுமிர்னா எபேசுவில் வடக்கே ஆசியாவின்ரோமானிய மாகாணத்தின் (நவீன துருக்கியின்) ஏஜியன் கடலோரப்பகுதியிலுள்ள ஒரு நகரம். அது அற்புதமான கட்டிடங்களைக்கொண்டிருந்தது, மேலும் ஆசியா மைனரில் மிகவும் வளமானநகரங்களில் ஒன்றாக இருந்தது. கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் லீதியர்களால்கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்ட ஒரு கிரேக்க காலனியாக இருந்தது. இதுகி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டது, பின்னர் ரோம் ஒருநட்பு மாறியது. இறுதியில் எபேசுவிலிருந்து சுவிசேஷம் பரவியது.
Pergamon அல்லது Pergamum என்றும் அறியப்படுகிறது. மேற்கு ஆசியாமைனரில் (நவீன துருக்கி), ஸ்மிர்னாவுக்கு வடக்கே, மற்றும் ஏஜியன்கடலில் இருந்து சுமார் 15 மைல் தூரத்திலுள்ள நகரம். சிறிது காலமாகஅது ரோமன் மாகாண ஆசியாவின் தலைநகரமாக இருந்தது.
நவீன துருக்கியில் அமைந்துள்ள இது இப்போது அக்சார் எனஅழைக்கப்படுகிறது. தியத்தீரா லிசஸ் ஆற்றின் மீது ஆசியாமைனரில்(நவீன துருக்கி) ஒரு நகரமாக இருந்தது. பிலிப்பியில்இருந்தபோது பவுலும் அவரோடிருந்தவர்களும் லீதியாளின் வீட்டில்தங்கும்படி அழைக்கப்பட்டார்கள்(அவளும் அவளுடைய வீட்டாரும்ஞானஸ்நானம் பெற்றார்கள்).
சர்தை, ஸ்மிர்னாவுக்கு50 மைல் தொலைவில், ஆசியா மைனர் (துருக்கி), தெனாட்டிராவின் தெற்கே 30 மைல் தூரத்தில் உள்ள ஒரு நகரம். இதுமுன்னர் லிடியாவின் தலைநகரமாக இருந்தது, கிமு129 ல் ரோமானியப்பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. சர்திஸில் பகவானியம்செழித்தோங்கியது. கிறிஸ்துவர்கள் சமூகம் சிறியதாகவும், பலவீனமாகவும் இருந்தது, அவர்களில் பெரும்பாலானோர் தங்கள்பழைய மதங்களுக்கு திரும்பினர்.![😭](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f62d.svg)
![😭](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f62d.svg)
![😭](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f62d.svg)
![😭](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f62d.svg)
![😭](https://s0.wp.com/wp-content/mu-plugins/wpcom-smileys/twemoji/2/svg/1f62d.svg)
நவீன துருக்கியில் அமைந்திருக்கும் இது, இப்போது அலசிஹிர் என்றுஅழைக்கப்படுகிறது. பிலடெல்பியா ஆசியா மைனாரில் சர்தைக்கு 30 மைல் தென்கிழக்கே ஒரு நகரமாக இருந்தது. கிரேக்க கலாச்சாரத்திற்கானஒரு திறந்த கதையாக இது பெர்டாமோஸின் அட்டாலஸ் இரண்டாம்பிலடெல்ப்ஸ் நிறுவப்பட்டது. *இது கி.மு. 17-ல் பூகம்பத்தால்அழிக்கப்பட்டது மற்றும் திபெரியஸ் பேரரசரால் கட்டப்பட்டது
நவீன துருக்கியில் அமைந்துள்ள டென்னிஸ்லி என அறியப்படுகிறது. லாவோடிசியா பிலடெல்பியாவின்40 மைல் தென்கிழக்காகவும், மேற்குஆசியா மைனரில் (துருக்கி) எபேசுவுக்கு 80 மைல் தொலைவிலும்இருந்தது. இது புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியின் ஒரு *பணக்காரநகரம் ஆகும்.* அது நன்றாக கம்பளி ஆடைகளை ஏற்றுமதி செய்து அதன்கண் உமிழ்விற்கு புகழ் பெற்றது.
*மேலே ஜெயக்குமார் ஐயா கேட்டிருந்தார்கள், இப்போது அந்த சபைகளின்நிலையென்ன? அவைகள் இப்போது எந்த நாட்டில் இருக்கிறது என்ன… ஆதற்க்கான பதிலே மேலே…*
Comments
Post a Comment